free website hit counter

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க புதிய வாகன இறக்குமதி கொள்கையை இன்று அறிவித்ததுடன், தற்போதைய சந்தை விலையை விட 80 வீதம் வரை குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2024 ஆகஸ்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

வவுனியா மாங்குளத்தில் நேற்று மாலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பலவேகய (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியான பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன (PENP) இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …