உலகளாவிய தமிழ் மன்றம் (GTF) மற்றும் முக்கிய பௌத்த துறவிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கூட்டு இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்தனர்.
இது சமூக நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மைத்துவ இலங்கையை ஊக்குவிக்கும் எனவும் வரலாற்று தவறுகளில் இருந்து கற்ற பாடங்களின் மூலம் எதிர்கால நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியது.