free website hit counter

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.

குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்பு நிகழ்விலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலும் ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்கப்பட்டது. இதற்கு, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கும் தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை, மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

முன்னதாக, இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், மசோதா விரைவில் தாக்கலாகிறது.

இந்த மசோதா மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர் அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula