பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இந்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பில் இடம்பெறும் செயலமர்வுகளுக்கு தூரப் பிரதேச அரச நிறுவனங்களின் பிரதானிகள் அழைக்கப்படுவதை மட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் பாவனையைக் குறைத்தல் மற்றும் எரிபொருளுக்கான செலவைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.