free website hit counter

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 82 300 வெளிநாட்டினர் மீட்கப் பட்டிருப்பதாகவும், எஞ்சியிருப்பவர்களை மீட்கும் பணி ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பின்பும் தொடரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

கோவிட்-19 பெரும் தொற்றின் சமீபத்திய மிக ஆபத்தான திரிபான டெல்டா திரிபின் வருகையின் பின் அமெரிக்காவில் கோவிட் தடுப்பு மருந்துகளின் வீரியம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருப்பதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் பரிசோதனைப் பிரிவான CDC விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியில் தம்மை நிலைப் படுத்திக் கொள்ள இயலாத வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதை உறுதி செய்யும் இறுதித் தினமாக ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெறும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு கடும் சவாலாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த போராளிக் குழுவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தலிபான்கள் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அந்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இப்போது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: