தெற்கு சோமாலியாவின் டைன்சூர் நகரில் உள்ள இராணுவத் தளத்தின் மீது சமீபத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்த முயன்ற தாக்குதல் முறியடிக்கப் பட்டுள்ளது.
இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியது தமக்கு பாதிப்பில்லை என சவுதி அறிவிப்பு
சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா வழங்கி வந்த இராணுவத் தளவாட உதவிகளை அமெரிக்கா மிகவும் குறைத்துக் கொண்டது தமக்குப் பாதிப்பில்லை என்றும் இது தமது பாதுகாப்பு வளங்களைத் தாக்காது என்றும் சவுதி கூட்டணி நாடுகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.
எத்தியோப்பியாவில் பொதுத் தேர்தல்! : நல்லாட்சிக்கு அபிய் அஹ்மெட் உறுதிமொழி
ஆப்பிரிக்காவின் 2 ஆவது அதிக சனத்தொகை கொண்ட நாடான எத்தியோப்பியாவில் இன்று திங்கட்கிழமை பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றது.
பிரேசிலில் கொரோனா உயிரிழப்புக்கள் 5 இலட்சத்தைத் தாண்டியது
உலகளவில் கோவிட் தொற்றுக்களால் 2 ஆவது அதிகளவு உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடான பிரேசிலில் மீண்டும் உருமாறிய கோவிட் வைரஸ் பரவி வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஜுன் இறுதிக்குள் ஆப்கான் எல்லையுடனான வேலி கட்டி முடிக்க பாகிஸ்தான் தீர்மானம்
ஆப்கானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புக்கள் மீளப் பெறப்பட்டு வரும் நிலையில், இதனால் அங்கிருந்து தலிபான்களால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக ஜுன் இறுதிக்குள் ஆப்கானுடனான எல்லையில் வேலி கட்டி முடிக்கப் படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானின் புதிய அதிபராக தலைமை நீதிபதி தேர்வு! : இஸ்ரேல் எச்சரிக்கை
ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டு தலைமை நீதிபதியும், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலரும், மூத்த அரசியல் தலைவருமான 60 வயதாகும் இப்ராஹிம் ரைசி அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
வுஹான் ஆய்வகத் தகவல்களை ரகசியமாக அமெரிக்காவுக்கு வழங்கிய சீன உளவு நபர்?
சீனாவில் இருந்து தப்பிச் சென்று வுஹான் ஆய்வகம் குறித்த அனைத்து தகவல்களையும், சீன உளவுத்துறை துணை அமைச்சர் அமெரிக்காவுக்கு வழங்கியதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.