free website hit counter

உலகின் பல நாடுகள் தமது மக்களுக்கு முழுமையாக கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்க முன்பே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாகத் தளர்த்துவது மிக ஆபத்தானது என்றும், இன்னமும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதாரத் தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக அமெரிக்க அதிபராக ஜோ பைடென் பதவியேற்று பல மாதங்கள் ஆகியும் அவர் இதுவரை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.

செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் டிரோமே மாகாணத்திலுள்ள சிறு நகரமொன்றில் கொரோனா தொற்றுக்குப் பின் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மக்களை சந்தித்து உரையாடுவதற்காக அவர்களை நெருங்கி சென்ற போது யாரும் எதிர்பாராத விதத்தில் ஒரு நபர் திடீரென அதிபரது கன்னத்தை அறைந்துள்ளார்.

பங்களாதேஷில் நடப்பில் இருக்கும் லாக்டவுனை இன்னமும் 10 நாட்களுக்கு நீடித்து அந்நாடு உத்தரவிட்டுள்ளதுடன் கோவிட்-19 பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளையும் இறுக்கமாக்கியுள்ளது.

மேற்குலக வல்லாதிக்கத்தில் இருந்து சேர்பிய மக்களைப் பாதுகாக்க தான் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எனத் தன்னைக் காட்டிக் கொண்டார் முன்னால் பொஸ்னியன் சேர்பியன் இராணுவத் தளபதி ரட்கோ மிளாடிக்.

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் தெற்கே ஒரு மர்ம நபர் தான் ஓட்டி வந்த டிரக் வண்டியினை வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

தைவானில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுக்கள் காரணமாக அங்கு ஜூன் 28 ஆம் திகதி வரை கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து, பள்ளிகள் மற்றும் ஏனைய இடங்கள் இன்னும் இரு கிழமைகளுக்கு மூடிய நிலையிலேயே இருக்கவுள்ளன.

மற்ற கட்டுரைகள் …