free website hit counter

இஸ்ரேல் ஈரான் பலமான வான்வழித் தாக்குதலில் பலத்த சேதம் !

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் தங்கள் தாக்குதல்களை ஈரானியர்களும் இஸ்ரேலியர்களும் விரிவுபடுத்திய பின், இரு நாடுகளிலும் புகையும், இடிபாடுகளும் நிறைந்திருந்தன.

இஸ்ரேல் தெஹ்ரானின் பாதுகாப்பு அமைச்சகத்தைத் தாக்கியது, ஈரான் ஒரு கொடிய ஏவுகணைத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜெருசலேம் மற்றும் டெல் அவிவில் வான்வழித் தாக்குதல் அதிகரித்தன. இஸ்ரேலின் இராணுவம் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் "தங்குமிடம் தேடி ஓடுகிறார்கள்" என்று AFP பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இரவு முழுவதும் நடந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 200 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலின் அவசர சேவைகள் தெரிவித்தன. இந்தத் தாக்குதல் பதட்டத்தைத் தணிக்க உலகளாவிய வேண்டுதல்கள் இருந்தபோதிலும், மூன்றாவது நாள் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேவேளை  ஈரான் அமெரிக்காவுடனான அதன் சமீபத்திய அணுசக்தி பேச்சுவார்த்தைகளை கைவிட்டதுடன், இஸ்ரேலின் தாக்குதலின் கீழ் இருக்கும்போது பேச்சுவார்த்தைகள் நடத்த முடியாது எனத் திட்டவிட்டமாகக் கூறியுள்ளது.

பல தசாப்தங்களாக பகைமை மற்றும் மறைமுக மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் இவ்வளவு தீவிரதாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. இது மத்திய கிழக்கில்  நீடித்த மோதலுக்கான அச்சத்தைத் தூண்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula