free website hit counter

வடமாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (28) லேசான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி 24% முதல் 35% வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், அத்துடன் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

வெற்று கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடவுச்சீட்டு வழங்கல் மேலும் மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் 18 நாடுகள் மற்றும் மூன்று அமைப்புகளுடன் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று கொழும்பில் வெளியிட்டார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: