free website hit counter

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான ‘தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு’ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை பொது வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தன.

இதன்படி, தமிழ் மக்கள் கூட்டமைப்பு உட்பட ஏழு தமிழ் அரசியல் கட்சிகளும் ஏழு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்த ஒப்பந்தத்தில் ஜூலை 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திட்டனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் (டெலோ) செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கூட்டணியின் டி.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் ஸ்ரீகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். (4TamilMedia)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula