free website hit counter

'அறகலய செயற்பாட்டாளர்கள் இளம் தலைவரை விரும்பினர்’ – நாமலின் வேட்புமனு குறித்து மஹிந்த

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கைப் பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ, தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அறகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தேசத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு இளம் தலைவர் தேவை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அத்தகைய இளம் தலைவர் என்றும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இளைஞர்களின் ஆதரவைப் பெற்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், அவர்களை கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (நியூஸ்வயர்)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula