free website hit counter

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தமது அரசியல் கட்சிக்கு முன் நாட்டை முன்னிறுத்தியதன் விளைவாகவே தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று இரண்டு முக்கிய தீர்ப்புகளில் தீர்மானித்துள்ளது.

ஜப்பானின் தெற்கு கடற்கரையில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. குடியிருப்பாளர்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர், ஆனால் காயங்கள் அல்லது கடுமையான சேதங்கள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான ‘தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு’ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை பொது வேட்பாளராக முன்னிறுத்த தீர்மானித்துள்ளது.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்ததுடன், சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு தேசிய அரசாங்கத்தை அமைக்க பகிரங்க அழைப்பையும் விடுத்துள்ளார்.

இலங்கைப் பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவர் எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ, தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அறகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: