free website hit counter

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் எமக்கு எந்த நன்மையும் இல்லை’ – நாமல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தனது ஆட்சியின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் தனது முதல் பேரணியில் உரையாற்றிய ராஜபக்ச, தங்கள் அரசாங்கம் ஒரு சதியால் கவிழ்க்கப்பட்டதாக தான் நம்புவதாகவும், எனினும், அவர்கள் அரசை வீழ்ச்சியடைய விடவில்லை என்றும் கூறினார்.

"அரசைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதால் நாங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தோம்" என்று ராஜபக்ச கூறினார்.

“SLPP உடன்பட முடியாத கொள்கைகள் இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் எங்கள் ஆதரவை வழங்கினோம். கொள்கைகளுடன் அரசியலில் ஈடுபடுகிறோம். நாங்கள் எங்கள் விழுமியங்களைப் பாதுகாக்கும் அரசியல் முகாம். எனவே, ஒரு திட்டத்துடன் முன்னோக்கி செல்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மேலும் பேசுகையில், “இந்த பௌத்த நாட்டில் அனைத்து மதங்களையும் மதிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மாட்டோம். வடக்கில் உள்ள எமது தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் எமக்கு எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

"நாம் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

-4TamilMedia

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula