2024 ஜனவரியில் இலங்கை வெளிநாட்டு பணியாளர்கள் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4% அதிகரிப்பு என அமைச்சர் நாணயக்கார ’X’ இல் எடுத்துரைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்களின் பணம் 2023 இல் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரோக்கியமான மட்டத்தில் பதிவு செய்துள்ளது.