free website hit counter

அமெரிக்கா - ஈரான் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிவு

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன; கடந்த இரண்டு மாத கால உச்சத்திலிருந்து இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்து போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து, சுமாா் 2 வாரங்களாக ஈரான் மீது அமெரிக்கா தீவிரமாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. அந்தத் தாக்குதலை அமெரிக்கா தற்போது நிறுத்தியுள்ளது. ஆனால், எதனால் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அந்த நாடு விளக்கமளிக்கவில்லை. எனினும் ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை முழுமையாக நீடிப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவற்றைத் தாக்கும் ஈரானும், அதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத் தாக்குதல்களை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன; கடந்த வாரம் எட்டப்பட்ட இரண்டு மாத கால உச்சத்தில் இருந்து இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத விநியோகத்திற்கான 'பிரென்ட்' ரக கச்சா எண்ணெயின் விலை, வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 4.9% சரிந்து 92.02 டாலராகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 3.9% சரிவைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் 'பிரென்ட்' கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் ஒரு பீப்பாய்க்கு 102 டாலர் வரை உயர்ந்தது. இது மாதத்தின் தொடக்கத்தில் 'பிரென்ட்' சந்தையில் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் விலையை விட 30 டாலர் அதிகம் என்றாலும், மே மாதத்திற்குப் பிறகு செஞ்சுரி அடித்து, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீதான முதற்கட்ட தாக்குதலின்போது, மே 12 ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்து வர்த்தகமானது. இதே நிலை, 2022-இல் ரஷியா- உக்ரைன் இடையிலான போரின்போது ஏற்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்த மோதல்கள் மற்றும் முழு அளவிலான போர் மீண்டும் ஏற்பட்டால் கச்சா எண்ணெயின் உலகளாவிய விநியோகம் மேலும் மந்தமடையும் என்ற கவலையில் இந்த மாதம் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன.

பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வது எண்ணெய் சந்தையின் முக்கிய கவலையாக இருந்து வருகிறது. ஈரானின் கடற்கரைக்கு அப்பால் உள்ள இந்த குறுகிய நீரிணை வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வளைகுடாவிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது; தற்போது நிலவும் மோதல் சூழல் கப்பல் போக்குவரத்தை பெருமளவு முடக்கியுள்ளது.

அப்போதிருந்து எண்ணெய் உற்பத்தியாளர்கள் மாற்று வழிகளைத் தேடி வருகின்றனர், ஆனால் அந்த வழிகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. கடந்த வாரம், அந்த பகுதியிலிருந்து வெளியேற செங்கடலைப் பயன்படுத்திய சவுதி எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு எண்ணெய் குறைவாகக் கிடைக்கும்போது, ​​அதன் விலையும் எரிபொருள் விலைகளும் அதிகரிக்கின்றன.

வாகன ஓட்டிகள் சங்க தரவுகளின்படி, அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கேலன் சாதாரண பெட்ரோலின் சராசரி விலை 4.11 டாலராக இருந்தது; இது ஒரு மாதத்திற்கு முன்பு 3.90 டாலராகவும், ஓராண்டுக்கு முன்பு 3.15 டாலராகவும் இருந்தது.

எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், மளிகைப் பொருள்கள் உள்பட உலகம் முழுவதும் கப்பல், லாரி அல்லது விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரிக்கக்கூடும். அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும், ஈரானுடனான தற்போதைய மோதல் நுகர்வோரின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட பணவீக்கம் குறையத் தொடங்கியதில் இருந்து, இந்த மாதம் எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. சிஎம்இ குழுமத்தின் தரவுகளின்படி, பணவீக்க அழுத்தம் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்; இதனால், வரவிருக்கும் கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் தனது முக்கிய வட்டி விகிதத்தை 36% உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

அதிக வட்டி விகிதங்கள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும்; ஆனால், அதே சமயம் அமெரிக்க மக்களுக்கும் வணிகங்களுக்கும் கடன் பெறுவதை அதிக செலவுமிக்கதாக மாற்றுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும் அவை மந்தமாக்கக்கூடும்.

உதாரணமாக, அமெரிக்காவின் நீண்ட கால வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஓராண்டில் உச்சத்தை எட்டியுள்ளன, இது வீட்டுவசதித் துறையில் மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடன் பெறுவதற்கான செலவு அதிகரிப்பது, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ள செய்யறிவு தரவு மையங்களின் கட்டுமானப் பெருக்கத்தையும் குறைக்கக்கூடும்.

ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் விலை உயர்வில் இருந்து எண்ணெய் விலைகள் சற்று குறைந்திருந்தாலும், இன்னும் அதிக நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது.

செப்டம்பர் மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ள அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் வகையின் ஒரு பீப்பாய் விலை ஞாயிற்றுக்கிழமையன்று 5.6% சரிந்து 84.34 டாலராக இருந்தது. வெள்ளிக்கிழமை இது 3.1% ஆக சரிந்திருந்தது.

எண்ணெய் சந்தையில், எதிர்காலத்தில் பல மாதங்களுக்குப் பிறகு விநியோகிக்கப்படவுள்ள எண்ணெய் பீப்பாய்களுக்கான ஒப்பந்தங்களை வர்த்தகர்கள் வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள். தற்போது சந்தையில் மிகவும் தீவிரமாக வர்த்தகம் செய்யப்படும் அக்டோபர் மாத விநியோகத்திற்கான 'பிரென்ட்' கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 4.6% சரிந்து 87.48 டாலராக உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula