free website hit counter

பழைய இராணுவத்தினர் ஒருபோதும் மறைய மாட்டார்கள், சரத் பொன்சேகா மேலும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்: ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஒரு போதும் விட்டுக்கொடுக்காத திறமை படைத்தவர் என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் சேவைகளை எதிர்வரும் காலங்களில் அனுபவிக்கும் வாய்ப்பை இலங்கை பெறும் என நேற்று தெரிவித்தார்.
"பொன்சேகாவினால் இன்னும் தேசத்திற்காக உழைக்க முடிகிறது. அப்படிப்பட்டவர்கள்தான் எங்களுக்குத் தேவை. முதியோர்கள் சாகவே மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் மறைந்துவிடுவார்கள். பொன்சேகா மறையமாட்டார். அவர் இன்னும் இங்கேயே இருக்கிறார்."

"எனவே, எதிர்வரும் காலங்களில் அவரது சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை நாடு பெறும்" என, கொழும்பில் நேற்று இடம்பெற்ற, “தேசத்திற்கு இராணுவத் தளபதியின் உறுதிமொழி” எனும் தலைப்பில், எம்.பி.பொன்சேகாவின் நூல் வெளியீட்டு விழாவில், ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula