free website hit counter

புதிய கடவுச்சீட்டுகள்: பதிவு செய்வதற்கான புதிய வழிமுறை அறிமுகம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் வசதிக்காக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
இன்று (ஜூலை 17) முதல் அமுலுக்கு வரும் வகையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டதாக குடிவரவுத் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக முன் பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும், இது சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்கான புதிய வழிமுறை பின்வருமாறு;

e-passport-1 e-passport-3

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula