வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அனுராதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டது.
லேசான நில அதிர்வு காரணமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.