இந்திய அரசாங்கம் செய்ததைப் போலவே எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
"இந்திய நுகர்வோரின் சிரமத்தைத் தணிக்கும் பொருட்டு, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியைக் குறைக்கவும், டீசல் மீதான வரியை முற்றிலுமாக நீக்கவும் மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுர குமார திசாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, இதைப் பின்பற்றுவதற்கு இதுவே சரியான தருணம்" என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.