இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இணைய ஊடுருவலுக்கு பலியாகியுள்ளது.
"Anonymous EEE" என்று கூறப்படும் ஹேக்கர்கள், தளத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற முடிந்தது. இதன்போது பாதுகாப்பு பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை செய்தியை விட்டுச் சென்றுள்ளனர்.
ஹேக்கர் விட்டுச் சென்ற செய்தியில், "எனது பெயர் Anonymous EEE மற்றும் நான் தற்போது A/I படித்து வருகிறேன். உங்கள் வலைத்தளத்திற்கு அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும், ஆனால் உங்கள் வலைத்தளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஒரு இலங்கை குடிமகனாக நான் இதைப் புகாரளிக்கிறேன். நன்றி." என குறிப்பிடப்பட்டிருந்தது.