கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் திணைக்களப் பொருளியல் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கவின் கருத்துப்படி, வாகன இறக்குமதி தொடர்பான எதிர்காலக் கொள்கைகள், தேவையின் அடிப்படையில் மட்டுமே இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் வகுக்கப்பட வேண்டும்.
உண்மையான தேவை இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்வது, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குத் தேவையற்ற செலவினத்தை ஏற்படுத்துகிறது என்று பேராசிரியர் துனுசிங்க கருதுகிறார்.
மேலும் பேசிய பேராசிரியர் துனுசிங்க, வாகன இறக்குமதியாளர்கள் சமீபகாலமாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதால், வாகன விற்பனையகங்களில் விற்கப்படாத வாகனங்கள் குவிந்து கிடப்பதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய கூடுதல் கட்டணக் கட்டமைப்பின் காரணமாக, இறக்குமதியாளர்கள் வாகனங்களை அதிக விலைக்கு விற்பதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
உண்மையான தேசியத் தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே வாகன இறக்குமதி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பற்றாக்குறையாக உள்ள அந்நியச் செலாவணியைச் சுரண்டும் வகையில் அது இருக்கக்கூடாது என்றும் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க வலியுறுத்தினார். கட்டுப்பாடற்ற இறக்குமதியை அனுமதிப்பது, விற்பனையகங்களில் வாகனங்கள் குவிக்கப்படுவதற்கும், அதே நேரத்தில் அதிக சந்தை விலையில் அதீத இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.