free website hit counter

இலங்கையில் மேலும் பல முந்நாள் இந்நாள் அரசியல்வாதிகள் விசாரணை வளையத்தில் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சட்டவிரோதமாகப் பணம் ஈட்டியமை,  சொத்துக்களை வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை அறிதல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID )  விசாரணைகளை,  ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த கால அரசாங்கங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த  அமைச்சர்கள் என, மொத்தம்  28 அரசியல்வாதிகள் இந்த விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் எனவும் தெரிய வருகிறது. 
பல சிங்கள உறுப்பினர்களுடன் , தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர்களும் இந்த விசாரணைப்பட்டியலில் உள்ளதாகவும், உரிய நேரத்தில், விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula