free website hit counter

இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்கள் சில தற்காலிகமாக மூடப்படுகின்றன !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றைத் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகம் என்பன ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத' தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் கொழும்பு இல்லம் இன்று மீண்டும் பொதுமக்களால் முற்றுகைக்குள்ளாகியுள்ளது எனப் பிந்திக்கிடைத்த செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction