free website hit counter

இலங்கையில் நவம்பர் முதலாம் திகதி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று அதிகாலை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் நவ.1 முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தாக்கம் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன, இந்நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி செல்ல இடமளிக்கும் நோக்கில் இன்று அதிகாலை முதல் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து பாடசாலைகளினதும் கல்விப் பொதுத் தாரதர சாதாரண தர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற நவ 1ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் நிலைய சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction