free website hit counter

Sidebar

26
வி, ஜூன்
27 New Articles

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றினால் ஊரடங்கு தேவையில்லை: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டு மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

ஆனால், இந்த தொற்று காலத்தில் நாட்டு மக்களை பலி கொடுத்து அதனூடாக எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடுவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால், நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. ஆகவே நாட்டை முடக்குவது தொடர்பில் மாத்திரம் கருத்துரைப்பது அவசியமற்றது.

கொரோனா தாக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை எதிர்தரப்பினர் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றிக் கொள்ள முடியும்.” என்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula