free website hit counter

முல்லைத்தீவில் மூன்று பிரிவுகள் முற்றாக முடக்கம்; முள்ளிவாய்க்காலில் நினைவேந்த முடியாது!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் 926 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 261 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிப்படுத்தப்பட்டுள்ள முள்ளியவளைப் பகுதிக்குள்ளேயே முள்ளிவாய்க்கால் இருப்பதால், அங்கு யாராலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction