முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் மாநில தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சராக கீர்த்தனா பதவி வகித்து வரும்நிலையில், வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப். 4 ஆம் தேதியில் தைவான் நாட்டுக்கு அமைச்சர் கீர்த்தனா பயணம் மேற்கொள்ளவுள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தைவான் நாட்டில் செப். 4-ல் செமிகண்டக்டர், ஏஐ சிப் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக செமிகான் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொள்வதுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய்யும், செப். 10-ல் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய், செப். 10-ல் பிரிட்டன் செல்லவிருப்பதாகவும், செப். 16 வரையில் சுற்றுப்பயணம் முக்கிய தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் விஜய் அழைப்பு விடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து அரசுமுறை பயணமாக முதன்முறையாக முதல்வர் விஜய் வெளிநாடு செல்லவிருக்கிறார்.
