சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகளிலான தளர்வுகள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகவே மத்திய அரசினால் இன்று அறிவிக்கபட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மளர்வுகளின்படி, மே 31 திங்கள் முதல் உணவகங்களின் உட்புறங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்து ஆய்வகத்தில் உலக கொரோனா வைரஸ் மாதிரிகள் சேமிப்பு !
உலகெங்கிலும் இருந்து பெறப்படும் கொரோனா வைரஸ் மாதிரிகளை சுவிற்சர்லாந்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் சேமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இத்தாலியில் மோசமான கேபிள் கார் விபத்து! : 14 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலியின் பீடுமோண்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்திலுள்ள மேகியோர் என்ற ஏரியின் குறுக்கே மோட்டரோன் மலைக் குன்றுக்கு செல்ல அமைந்திருக்கும் கேபிள் காரில் கட்டமைப்பில் 985 அடி உயரத்தில் ஒரு கேபிள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது.
இத்தாலியின் அனைத்து பிராந்தியங்களும் 'குறைந்த ஆபத்து' உள்ள பகுதிகளாக அறிவிப்பு !
இத்தாலியிலுள்ள அனைத்து பிராந்தியங்களும் தன்னாட்சி மாகாணங்களும், வரும் திங்கட் கிழமை முதல் குறைந்த ஆபத்துள்ள 'மஞ்சள்' மண்டலப் பகுதிகளாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் மே 31 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி !
பிரான்சில் மே 31ந் திகதி முதல் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார்.
சுவிஸிலிருந்து இத்தாலிக்கு குவியும் விடுமுறைக்கால முன்பதிவுகள் !
இத்தாலி தனது நாட்டிற்குள்ளான நுழைவு கட்டுப்பாடுகளை மே 16 ல் தளர்த்தியுள்ளதால், சுவிஸ் குடியிருப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இத்தாலிக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கோடை விடுறைக்கான முன்பதிவுகளை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தில் கோவிட்-19 தொடர்பில் இரு நற் செய்திகள் ! - வர்ஜீனி மஸ்ஸெரி
சுவிற்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுநோயியல் தொடர்பில் இரு மகிழ்வான செய்திகள் அல்லது மேம்பட்ட செய்திகள் உள்ளன என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின் (FOPH) இன் தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸெரி தெரிவித்துள்ளார்.