தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.
தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, சமகாலத்திய உலகமயமாக்கலின் அடிப்படை முரண்பாட்டை மிகத் தெளிவாக முன்னிலைப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்கும் நிதி மூலதனத்தின் நலனுக்கும் உள்ள முரண்பாடு என்ன என்பது தற்போது மிகத் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறது. உண்மையில், இந்த முரண்பாடு என்பது ஒட்டுமொத்த உலகமயமாக்கலின் அடிப்படை குணாம்சத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும், இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. இது உலகில் இப்படி உலகமயமாக்கலுக்குக் கட்டுண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் அம்பலமாகியுள்ளது.