'தக்லைப்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய " முத்தமழை..." பாடல் இணையத்தில் வேகமாகப் வைரலானது. அதனைத் தொடர்ந்து இப்பாடலைத் தமிழில் பாடிய பாடகி 'தீ'யின் பாடல் நன்றாக இருந்ததா? சின்மயி பாடியது நன்றாக இருந்ததா? என வாதப் பிரதி வாதங்கள் பல எழுந்தன.
இவையெல்லாம் படத்தில் இப்பாடலுக்கான எதிர்பார்ப்பினை எகிறச் செய்திருந்தன. ஆனால் படம் வெளியாதன போது இப்பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை. படம் வெளியாகிப் பலமான எதிர்மறை விமரிசனங்களைப் பெற்று வந்த நிலையில், " முத்தமழை " பாடலின் கானொலியைத் தனியாகச் சென்ற 14ந் திகதி youtube தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்தக் கானொளி, அப்பாடலின் மீதான இரசனையை மொத்தமாக இழக்கச் செய்திடும் வகையில் அமைந்துவிட்டது. இதுபோன்று பல நல்ல பாடல்கள் மீதான இரசனையை, அவற்றின் காட்சிப்பதிவுகள் மொத்தமாகச் சிதைத்துவிடும் வகையில் ஏற்கனவே வெளிவந்துள்ளன. மே மாதம் படத்தில் இடம்பெற்ற " மார்கழிப் பூவே .." பாடல் முதல், மின்னலே பாடத்தின் பாம்பே ஜெயஶ்ரீ பாடிய " வசீகரா." போன்ற பாடல்கள் அத்தகைய எதிர்நிலையைத் தோற்றுவித்திருந்தன.
இப்போது வெளிவந்துள்ள ' முத்தமழை ' பாடலின் காட்சிப்பதிவு முன்னரே செய்யப்பட்டு, திருப்தியாக இல்லாததால் படத்தில் தவிர்க்கப்பட்டதோ அல்லது பாடல் பிரபல்யமானதும், அவசரமாக இந்தக் காட்சிப்பதிவினை செய்து வெளியிட்டார்களோ தெரியவில்லை. ஆனால் பாடகி ' தீ' யின் குரலுக்கும், நடிகை திரிஷாவின் வாயசைப்பு, மற்றும் முகபாவம் என்பவற்றுக்குச் சற்றும் பொருந்தவில்லை. சி வடிவமைப்புக்களை கச்சிதமாகச் செய்யும் இயக்குனர் எனப் பெயர் வாங்கிய இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த பாடலா என ஆச்சரியப்படுகின்றார்கள் இரசிகள். ஆக மொத்தம் அந்தப்பாடலுக்கு மொத்த வைச்சாச்சு ஆப்பு.