free website hit counter

கவிஞருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்த சிவகுமார்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980-களில் தன்னை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற - சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து இரண்டு படங்கள் எடுத்தவர் . அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள மோட்டர் சைக்கிளை வாங்கி நேற்று பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction