free website hit counter

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து 1137 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நீக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (21) இடம்பெற்றது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவாகி, பின்னர் வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்த 1137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிகொத்தாவில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநகரசபைகள் , நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் என 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்களாவர்.

அத்தோடு இவர்கள் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேறு கட்சிகளின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்களது கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் செவ்வாய்கிழமை (21) இடம்பெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

உறுப்புரிமை நீக்கப்பட்ட உறுப்பினர்களில் 300 பேர் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கு அவகாசம் கோரியிருந்த போதிலும் , அதனைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction