free website hit counter

GMOA அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த

வேலைநிறுத்தை நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று குறித்த சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். 

இதனையடுத்து நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction