free website hit counter

ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கையொன்றில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த நாட்களில் 10 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அந்த நேரம் ஏழு மணித்தியாலங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான எதிர்வரும் 13 மற்றும் 14 திகதிகளில் மின்வெட்டு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction