free website hit counter

நான் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை: மைத்திரி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“நான் எந்தவொரு தருணத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

தனக்கு அமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி, “அமைச்சுப் பதவி தொடர்பிலான எந்தவிதமான கோரிக்கையை அரசாங்கத்திடம் நான் முன்வைக்கவில்லை, அது தவறானது. அமைச்சர் பதவி மட்டுமன்றி, அரசாங்கத்திடம் எந்தவொரு பதவியையும் நான் கோரவில்லை.” என்றுள்ளது.

ஜூலை மாத நடுப்பகுதியில் அமைச்சரவையில் மாற்றமொன்று செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படலாமென அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction