பிரதமர் மோடி கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கானா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குச் சென்று இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்தார்.
அப்போது, இரு நாடுகளின் மிக உயர்ந்த விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்நிலையில், பிரதமர் மோடியின் டிரினிடாட் மற்றும் டொபாகோ பயணம் முடிந்ததும், அவர் அர்ஜென்டினா புறப்பட்டார்.
அர்ஜென்டினாவிற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற பிரதமர் மோடி, இன்று காலை அந்நாட்டில் உள்ள எஸீசா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர், அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றபோது, இந்திய வம்சாவளி மக்கள் மோடி, மோடி மற்றும் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடி அவர்களிடம் பேசினார். அவரை வரவேற்க ஒரு கலாச்சார நடனமும் நிகழ்த்தப்பட்டது.
57 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவர் வந்தபோது இந்திய சமூகம் அவருக்கு அன்பான வரவேற்பை அளித்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார்.
இந்தப் பயணத்திற்குப் பிறகு, அவர் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசிலுக்குச் செல்வார். இதன் பின்னர், அவர் இறுதியாக நமீபியாவுக்குச் செல்வார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    