free website hit counter

வவுனியாவில் இருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக உத்தேச சொத்து வரியானது கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரியாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை ஜூன் 19 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகப்பேறு மருத்துவர்களின் அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை 100,000 க்கும் அதிகமாக குறைந்துள்ளது மற்றும் ஆண்டு இறப்பு விகிதம் 35,000 அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16) மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிமேதகு டாக்டர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவை சந்தித்தார்.

உள்ளூர் பாடசாலை பாடத்திட்டத்தில் பல சீர்திருத்தங்களை அறிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் 4 மற்றும் 5 ஆம் தரங்களில் உள்ள வகுப்பறை வேலைகளில் இருந்து பெறப்படும் என்று கூறினார்.

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் 23% குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …