free website hit counter

சமகி ஜன பலவேகய (SJB) சுதந்திர மக்கள் காங்கிரஸின் (நிதாஹாச ஜனதா சபை) உறுப்பினர்கள் குழுவுடன் முக்கிய எதிர்க்கட்சி தலைமையிலான 'சமகி ஜன சந்தனயா'வை உருவாக்குவதற்கான முதல் படியாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு (அவுருது) காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது சேவைகளை தடையின்றி பேணுவதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை 2024 மே மாத தொடக்கத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (04) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் சுமார் 75,000 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (03) பொருளாதார வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் அத்தியாவசிய பொது சேவைகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வாக்குமூலம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் வழங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …