free website hit counter

இந்தோனேசியாவில் நடைபெற்ற 10வது உலக நீர் மன்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்கைச் சந்தித்து Starlink ஐ இலங்கையில் அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் என ஜனாதிபதி அலுவலகம் கூறியது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் அவரது வெளியுறவு அமைச்சரும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் பனிமூட்டமான வானிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் திங்களன்று, கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் இடிபாடுகளை தேடுதல் குழுக்கள் கண்டறிந்த பின்னர் கூறினார்.

நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, நிலவும் மழை நிலை மேலும் தொடரக்கூடும்.

முள்ளிவாய்க்கால் தாக்குதலின் 15 வருடங்களை நினைவுகூரும் நிகழ்வில் வெள்ளவத்தையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்துவது என்பது முட்டாள்தனமான பைத்தியக்காரத் திட்டம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில், பொது வேட்பாளர் தொடர்பிலான சம்பந்தனின் நிலைப்பாடு வெளியாகியிருக்கின்றது.

நாடு மற்றும் அதனை சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை மீண்டும் காலவரையின்றி தாமதமாகியுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction