free website hit counter

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையில் 33,000 க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோயாளிகளும் 19,000 இறப்புகளும் பதிவாகியுள்ளன, ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோயானது மிகவும் பொதுவானது மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோயானது முன்னணியில் உள்ளது என்று சுகாதார செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 10ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் (SLCO) 21வது வருடாந்த கல்வி அமர்வுகளில் அவர் புள்ளிவிபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பில் எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு ‘1997’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) உயர் அதிகாரிகளுடன் நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் பீரோ உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …