free website hit counter

ஓட்டுநர் உரிமம்: மோட்டார் போக்குவரத்து துறையின் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரிம அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாதுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக 800,000 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிரந்தர உரிம அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக உரிமங்களை திணைக்களம் வழங்கியதாக அவர் மேலும் கூறினார்.

தேவையான அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், பொதுவாக வருடத்திற்கு 900,000 முதல் 1 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் புதிய ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல்களாக அச்சிடப்பட வேண்டும், என்றார்.

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து, வழங்கப்படாமல் உள்ளதாக நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். (நியூஸ்வயர்)
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: