free website hit counter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் புதிய கூட்டணியை அமைத்துள்ளனர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியான பொதுஜன எக்சத் நிதஹஸ் பெரமுன (PENP) இன்று (05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள Water’s Edge ஹோட்டலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது, ​​புதிய கூட்டணியின் சின்னமாக "கோப்பை" வெளியிடப்பட்டது.

புதிய கூட்டணிக்கு பி.எம்.குணவர்தன தலைமை தாங்குவதுடன், பொதுச் செயலாளராக கலாநிதி ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula