free website hit counter

இந்தியாவுடனான நில இணைப்பு குறித்து முழுமையான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் இலங்கை - ஜனாதிபதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (16) மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிமேதகு டாக்டர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவை சந்தித்தார்.
நாட்டின் நிதி நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த முயற்சிகளுக்கு மன்னார் ஆயர் பாராட்டு தெரிவித்தார். இவர்களது சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களாக மேம்படுத்துவது முக்கிய தலைப்புகளில் அடங்கும். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது.

அவர்களின் கலந்துரையாடலின் போது, ​​உபரியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது மேலதிக கலந்துரையாடல்களை எதிர்பார்க்கும் நிலையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின் இணைப்பு அமைப்பது தொடர்பில் தற்போது சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நில இணைப்புக்கான முன் சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

மேலும், மன்னாரை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள், உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் மன்னார் கோட்டையின் சாத்தியமான அபிவிருத்தி உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் விரிவான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார். மன்னார் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுமாறும் மன்னார் ஆயர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட விகாராதிபதி பிதா பி.கிறிஸ்துநாயகம்; மடு தேவாலயத்தின் அருட்தந்தை ஞானப்பிரகாசம்; தந்தை பெப்பி சோசி; மன்னார் மறைமாவட்ட முன்னாள் விகார் ஜெனரல்; மற்றும் பிற மதகுரு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். (PMD)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula