free website hit counter

இராஜாங்க அமைச்சர்கள் நான்கு பேரை இலாகாக்களில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுப் பதவிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, இலங்கையின் அரசியலமைப்பின் 47(3)(a) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula