free website hit counter

மாங்குளத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வவுனியா மாங்குளத்தில் நேற்று மாலை கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணிவெடி வெடித்ததில் நான்கு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் அங்கம் வகிக்கும் பெண்களே முதலில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்த பெண்கள் 39 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். துணுக்காய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula