2023 (2024)க்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் வகையில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பரீட்சைகள் முடியும் வரை தடைசெய்யப்படும்.
ஏப்ரல் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்வி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2023 (2024) 2024 மே 06-15 வரை நடைபெற உள்ளது.