வவுனியாவில் உள்ள தமிழ் பேசும் பொதுமக்களுக்காக முதன்மையாக அர்ப்பணிக்கப்பட்ட ‘107’ என்ற அவசர தொலைபேசி இலக்கம் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் அவசர அவசர தொலைபேசி இலக்கம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பொது மொழிகளிலும் செயற்படுத்தப்படும் எனவும், ஆனால் முதன்மையாக அப்பகுதி தமிழ் பேசும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவிலுள்ள பொதுமக்கள் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் புதிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.