free website hit counter

மற்ற தலைவர்களை விட மஹிந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடியவர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை மீள அழைக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதிக்கு 6 வாகனங்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் உட்பட மூன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அக்டோபர் 21 அன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .

இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, உளவுத்துறை அதிகாரிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான முன்னாள் தலைவர் எனவும், அவரின் பாதுகாப்புக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula