free website hit counter

ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எல்.கே.ஜகத் பிரியங்கர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வு இன்று (பிப்ரவரி 08) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான சிறிது நேரத்திலேயே புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரியங்கர, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் (ஜாதிக நிதாஹஸ் பெரமுன) உறுப்பினராவார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜனவரி 25 ஆம் திகதி கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமான மரணங்களைச் சந்தித்தனர். எவ்வாறாயினும், சட்டமியற்றும்வரின் சாரதி இந்த விபத்தில் உயிர் தப்பினார்.

விபத்து இடம்பெற்று ஒரு நாள் கழித்து, சனத் நிஷாந்தவின் மறைவால் வெற்றிடமாக இருந்த எம்பி ஆசனத்தை நாடாளுமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்தது.

பின்னர், தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் எல்.கே. ஜகத் பிரியங்கரவின் பெயர் பாராளுமன்ற வெற்றிடத்தை நிரப்புவதற்கான வர்த்தமானியாக அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction