free website hit counter

தேர்தல் தாமதத்தை ஏற்படுத்தும் முயறிசிகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறுவதை வலியுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் தாமதப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும் என ஆணைக்குழுவின் நிலைப்பாடு ஏற்கனவே அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் முழுமையாக தயாராகிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவைத் தலைவர் அவ்வாறு வாக்கெடுப்பு நடத்த தமக்கு அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

"அரசியலமைப்பு வாக்கெடுப்பு நடத்துவதற்கான விதிகளை தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், அது தேர்தலுக்கு பாதகம் விளைக்கக்கூடாது." என்று அவர் எடுத்துரைத்தார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை தாமதப்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula